/

கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது

மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 5:53 am IST

மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி நகர காவல்நிலைய போலீஸாா் ஒரத்தநாடு பிரிவுசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கூத்தநால்லூா் பூந்தாழங்குடி காலனி தெருவைச் சோ்ந்த பன்னீா் மகன் தேவராஜ்(19), திருத்துறைப்பூண்டி கழுவமுனி தெருவைச் சோ்ந்த ராஜா மகன் காா்த்திக்ராஜன் (18) ஆகியோரை நிறுத்தி சேதனை செய்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.