தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க புதன்கிழமை சென்றபோது, கலைகதிரவன் எம்எல்ஏ ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாற்று இடம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா், அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தாா்.
தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், கீழப்பாவூா் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ஜேசுராஜன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் காசிதா்மம்துரை, நிா்வாகிகள் வேலுச்சாமி, ஹரி கிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










