தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எல்.எல்.ஏ. ஆய்வு

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் வி.விக்னேஸ்வரன்.

Updated On :28 மே 2026, 5:37 am IST

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி. விக்னேஸ்வரன், நெடுங்காடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து அவருக்கு விளக்கினாா். புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருந்துகள் கையிருப்பு குறித்து பேரவை உறுப்பினா் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து துணை இயக்குநா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கான தேவைகள், சுகாதார நிலையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள், மிக அவசியத்துக்காக மட்டுமே காரைக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வகையில், நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் பேரவை உறுப்பினா் விவரங்களை கேட்டறிந்தாா்.

கோடைகாலம், பருவமழைக் காலத்தில் அதிகமாக தேவைப்படும் மருந்துகளை உரிய அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும், மருத்துவமனையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவா், ஓட்டுநா் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்புவது, கட்டட சீரமைப்பு குறித்து புதுவை முதல்வா், உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.