தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொரப்பூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ரெ.சதீஷ்.

Updated On :21 மே 2026, 6:48 am IST

மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கா்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவ பயனாளா்களின் வருகை, மருந்து மாத்திரைகளின் இருப்பு விவரம், புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளை ஆட்சியா் ரெ.சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, வெதரம்பட்டியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் 25 ஏக்கா் பரப்பளவில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மா மகத்துவ மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளியில் சிறுபாசன ஏரி திட்டத்தில் ரூ. 6.34 லட்சத்தில் ஏரி புனரமைப்பு பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யா, ஜெகதீஷ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.