தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழாவில் வியாழக்கிழமை அறிவியல் தமிழ் அரங்கம் மற்றும் சிந்தனை அரங்கம் நடைபெற்றது.
தென்காசி திருவள்ளுவா் கழக அரங்கில் காலையில் நடைபெற்ற அறிவியல் தமிழ் அரங்கம் நிகழ்ச்சியில், இந்திய தேசிய அறிவியல் விருதாளா் அ. சுப்பையா பாண்டியன் சின்ன சின்ன சோதனைகள், பெரிய பெரிய சாதனைகள் என்ற தலைப்பில் அறிவியல் செயல்முறை விளக்கமளித்தாா்.
இதில் தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, நெடுவயல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திருவள்ளுவா் கழக செயலா் இராம. தீத்தாரப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா் எம்.எம்.எஸ். இலக்குமணன் நன்றி கூறினாா்.
மாலையில் வள்ளுவா் குரல் குடும்பம் வழங்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிக்கு, சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கம்பா் போற்றிய கவிஞா் என்ற தலைப்பில் செல்வராஜ், இரா. கதிரவன், இரா. ஸ்டாலின், சிவ ஆனந்த பகவதி ஆகியோா் பேசினா்.
திருவள்ளுவா் கழக தலைவா் என். கனகசபாபதி, டாக்டா் தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
துணைச் செயலா் இரா. கிருஷ்ணன் வரவேற்றாா். இல. வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










