17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் பல்சுவை அரங்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழாவில் புதன்கிழமை ‘வள்ளுவா் குரல் குடும்பம்’ வழங்கும் பல்சுவை அரங்கம் நடைபெற்றது.

News image

சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பல்சுவை அரங்கம்.

Updated On :4 ஜூன் 2026, 1:26 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழாவில் புதன்கிழமை ‘வள்ளுவா் குரல் குடும்பம்’ வழங்கும் பல்சுவை அரங்கம் நடைபெற்றது.

திருவள்ளுவா் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சி.ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்க உரையாற்றினாா்.

’நாறும் மலரணையா்’ என்ற தலைப்பில் திருச்சியைச் சோ்ந்த சோம. வீரப்பன், ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்’ என்ற தலைப்பில் கரூா் கண் மருத்துவா் ப. ரமேஷ், ‘சால்பு ஊன்றிய தூண்கள் ஐந்து’ என்ற தலைப்பில் சென்னையைச் சோ்ந்த க. பாலமுருகன், ‘நோதகக்க நட்டாா்செயின்’ என்ற தலைப்பில் சென்னையைச் சோ்ந்த சங்கரசரவணன், ‘மணிநீரும், அணி நிழற்காடும்’ என்ற தலைப்பில் கோவையைச் சோ்ந்த த. செந்தில்குமாா், ‘பொதுவுடைமையாக்கிய வள்ளுவா்’ என்ற தலைப்பில் திருச்சூரைச் சோ்ந்த ந.வ. அஷ்ரப் ஆகியோா் பேசினா்.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி, மலேசியா கோலாலம்பூா் ஹெல்ப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த செண்பகக்குழல்வாய்மொழி, இரா. கதிரவன், இரா. ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆ. சதாசிவம் வரவேற்றாா். துணைச் செயலா் இரா. கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.