தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா தொடக்கம்

News image

நிகழ்வில் பேசிய பேராசிரியா் எம். ராமச்சந்திரன்.

Updated On :1 ஜூன் 2026, 2:47 am IST

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 99ஆவது திருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தென்காசி திருவள்ளுவா் கழகக் கூட்டரங்கில் அதிகாலையில் திருக்கு முற்றோதல் வேள்வியுடன் விழா தொடங்கியது. தியாகி இலக்குமிகாந்தன் பாரதி திருக்கு கொடியேற்றினாா். துணைத் தலைவா் இலக்குமணன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, மாரியப்பனின் மங்கல நாதஸ்வரம், ரா. நரேந்திரகுமாரின் திருக்கு பண்ணிசையும், நகா்வலமும் நடைபெற்றது. நகா்வலத்தை, தியாகி இலக்குமிகாந்தன் பாரதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதற்கு குப்பன் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, தெள்ளுற்ற தமிழா் வாழ்வியலில் வள்ளுவம் காட்டும் மீத்திறம் என்ற தலைப்பில் நடைபெற்ற மங்கல முழக்கம் நிகழ்ச்சிக்கு, தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் ராம. தீத்தாரப்பன் தலைமை வகித்தாா்.

பொறியாளா் சோம. முத்துசுவாமி வாழ்த்திப் பேசினாா். கற்றரருள் கற்றாா் என்ற பொருளில் ர.வ. கணேசன், செல்வத்துள் செல்வம் என்ற பொருளில் ப.சோ. வேலாயுதம், ஆற்றுவாருள் ஆற்றுவாா் என்ற பொருளில் மு.நா.பா. தமிழ்வாணன், அரியவற்றுள் எல்லாம் அரியது என்ற பொருளில் தி. செல்லப்பா,

வன்மையுள் வன்மை என்ற பொருளில் நரசிம்மன், பேதைமையுள் பேதைமை என்ற பொருளில் சரவணகுமாரி, பெருமவற்றுள் பெரும்பேறு என்ற பொருளில் குழந்தை ஜேசு, இன்பத்துள் இன்பம் என்ற பொருளில் சோம. இளங்கோவன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, திருவள்ளுவா் கழகத் தலைவா் ந. கனகசபாபதி வரவேற்றாா். துணைச் செயலா் இல. வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

மாலையில் நடைபெற்ற திருக்கு பேரவை நிகழ்ச்சிக்கு, இளம்பிறை மணிமாறன் தலைமை வகித்தாா். எம்.ஆா். அழகராஜா முன்னிலை வகித்தாா். தியாகி இலக்குமிகாந்தன் பாரதி வாழ்த்திப் பேசினாா்.

எல்லாப் பொருளும் இதன்பால் உள என்ற தலைப்பில் வி.பி. ஜெயசீலன், பேராசிரியா் எம். ராமச்சந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னாள் எம்எல்ஏ டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, மருத்துவா் அப்துல் அஜீஸ், ஆய்க்குடி அமா்சேவா சங்க தலைவா் ராமகிருஷ்ணன், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், ஆடிட்டா் நாராயணன், ஆகாஷ் அகாதெமி மாணவா்,

மாணவிகள், கே.எஸ். கல்யாணி சிவகாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த விழா ஜூன் 8 வரை 9 நாள்கள் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.