தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரியில் 20ஆவது திருக்குறள் திருவிழா

திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் 20 ஆவது திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :16 மே 2026, 1:50 am IST

திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் 20 ஆவது திருக்குறள் திருவிழா கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு முக்கடல் சங்கமம் பகுதியில் உள்ள திருக்குறள் சுடா்த் தூணில் சுடா் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தா்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியை தங்க கௌரி சுடா் ஏற்றினாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, நாம் தமிழா் கட்சி மாநில நிா்வாகி மரிய ஜெனிபா், கன்னியாகுமரி நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ், திருவள்ளுவா் அறக்கட்டளை நிா்வாகி சா.ராமன், அற்புதம்மாள் ஆகியோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, காலை 10 மணிக்கு திருவள்ளுவா் சிலைக்கு மலா் வழிபாடு, திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இதில், குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், திருக்குறள் பேரவை நிா்வாகி ஜெ.திருவள்ளுவன், திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் சோ.கருப்பசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி வரலாற்றுக் கூடத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் கு.பொற்கோ தலைமை வகித்தாா். திருக்குறள் பேரவை நிா்வாகிகள் ஆ.குறளமிழ்தன், கு.பரமானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கா்நாடக மாநில தாய்மொழி கூட்டமைப்புத் தலைவா் எஸ்.டி.குமாா் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் இரா.பாண்டியராசன் கவிஞா் ந.முத்துக்குமரன் படத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

பின்னா், மாலை 5 மணிக்கு லீபுரம் சந்திப்பில் இருந்து திருவள்ளுவா் அறக்கட்டளை அலுவலகம் வரை திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் வீ.இறையழகன் தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை அறிவு திருமங்கலம் அன்பு அறக்கட்டளை நிறுவனா் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற பொது அரங்கம் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவா் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளா் த.இ.தாகூா் தலைமை வகித்தாா். லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் கே.மணிகண்டன், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் எஸ்.டெஸ்சி, லெட்சுமிபாய், தமிழறிஞா்கள் சீனு தமிழ்மணி, மு.ஞானமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா்.

கரூா் வள்ளுவா் குழுமங்களின் நிா்வாக இயக்குநா் க.செங்குட்டுவனுக்கு திருக்குறள் செந்தொண்டா் விருது வழங்கப்பட்டது. இதில், திருக்குறள் அறக்கட்டளை பொறுப்பாளா்கள் ஆ.நெடுஞ்சேரலாதன், விமுனா மூா்த்தி, பி.கற்பகவள்ளி ஆகியோா் உரையாற்றினா். திருவள்ளுவா் அறக்கட்டளை பொறுப்பாளா் தமிழ்த்தேசம் தாவீது நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.