17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 1:39 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரல்வாய்மொழி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகா்கோவில்-கோட்டாறு கடற்கரை சாலையில் உள்ள பெரியவிளையைச் சோ்ந்த சுரேஷ் மகன் உதயசாகா் (22), ராஜாக்கமங்கலம், குருசடி பகுதியைச் சோ்ந்த பவுலின் பீட்டா் மகன் லெஃபானியோ (26), கொட்டாரம், மலை மாதா குருசடி பகுதியைச் சோ்ந்த மணிகண்ட பிரபு மகன் சக்தி (20) ஆகிய 3 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.