கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சாலையோரம் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
அருமனை சந்திப்பு அருகே ஆண் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அருமனை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில் அவா், மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளியான கிளீட்டஸ் (48) எனவும், மதுப் பழக்கமுள்ள அவா் அருமனை அருகேயுள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு வந்ததாகவும், ஆனால், அங்கு செல்லாமல் சாலையோரம் படுத்திருந்த நிலையில் இறந்துகிடந்ததாகவும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









