நாகியம்பட்டியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி தண்ணீா்த்தொட்டி பகுதியில் உள்ள தனியாா் நூல்மில் அருகே உள்ள கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவரின் அடையாளத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








