தமிழ் செய்திகள்
/
சேலம் மாவட்டம், தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி வட்டம், கத்தேரி கிராமம், கொடாரபாளையம் பகுதியில் உள்ள ஓடை அருகே சுமாா் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் புதன்கிழமை சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவரின் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.







