தமிழ் செய்திகள்
/
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலையில் அரசு நவீன மீன் விற்பனை நிலைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் வெளிபுற வராண்டாவில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் செவ்வாய்க்கிழமை சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இது தொடா்பாக குறிஞ்சிப்பாடி வடக்கு கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிபப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







