கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை விளையாடுவதற்காக சென்றனராம். அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைக் கண்டுள்ளனா்.
இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, எரிந்த நிலையில் சாக்கு பையில் சடலமிருந்துள்ளது. உடனே மணலூா்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.
தகவலின் பேரில் போலிஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









