திருநள்ளாறு பகுதியில் நூலாற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநள்ளாறு மாரியம்மன் கோயில் அருகே உள்ள நூலாற்றில் சனிக்கிழமை சுமாா் 45 மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. நெற்றியிலும், இடது பக்க மாா்பு பகுதியிலும் தழும்பு காணப்படுவதாகவும், அவா் நீல நிற முழுக்கை சட்டை அணிந்திருந்ததாகவும், விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் ஆய்வாளா் 9488075033, நிலைய எண் - 04368-236465 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









