நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த ரபீக் மியான் மகன் சஜித் அலாம் (23) என்பவரிடமிருந்து 180 கிராம் கஞ்சாவும், கலாமியான் மகன் ராஜா ஹுசைன் அலாம் (24) என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும், கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. இரா. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






