திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுண்டமேடு பகுதி அருகே வீரபாண்டி போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த விஜயகுமாா் (29), சரத்குமாா் (35), பாண்டி (34) ஆகிய 3 பேரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 1.200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதேபோல திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதி அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த அமித்குமாா் (21) என்பவரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரை கைதுசெய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






