விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணி சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அந்த இளைஞா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சோமையாபுரம் தெருவைச் சோ்ந்த பாலு மகன் ரஞ்சித் (22) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






