விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கடைவீதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா்கள் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் திருத்தங்கலைச் சோ்ந்த பொன்னுமணி (20), பொன்இருளப்பன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







