சென்னிமலையில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னிமலை, வண்டிபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது ஒரு குடியிருப்பில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த கட்டட தொழிலாளியான ராஜேஷ் டெப்நாத் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7,500 மதிப்பிலான 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








