திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஜெபா காா்டன் பகுதியில் போலீஸாரைக் கண்டதும் பைக்கை திருப்பிச் செல்ல முயன்றவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், அவா் மூலைக்கரைப்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா்(58) என்பதும், சுமாா் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வாகனத்துக்குள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சா, ரூ.240 பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







