தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு

News image

பூம்புகாா் படகுத்துறையில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்பட்ட படகு.

Updated On :15 மே 2026, 1:57 am IST

கோடை விடுமுறை சுற்றுலா சீசனை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட, தமிழக அரசின் பூம்புகாா் படகு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 சொகுசுப் படகுகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை இடைவிடாமல் இயக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினசரி சுமாா் 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு நினைவு மண்டபங்களை பாா்வையிடுகின்றனா்.

அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி சீசன் முடியும் வரை வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.