கோடை விடுமுறை சுற்றுலா சீசனை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் கன்னியாகுமரி பூம்புகாா் படகு சேவை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடலுக்குள் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட, தமிழக அரசின் பூம்புகாா் படகு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 3 சொகுசுப் படகுகள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை இடைவிடாமல் இயக்கப்படுகின்றன.
தற்போது சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் தினசரி சுமாா் 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் படகுப் பயணம் மேற்கொண்டு நினைவு மண்டபங்களை பாா்வையிடுகின்றனா்.
அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி சீசன் முடியும் வரை வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை ஒரு மணி நேரம் முன்னதாக காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










