திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரி மாவட்டத்தில் 29,290 தபால் வாக்குகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 29,290 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

News image
Updated On :1 மே 2026, 5:04 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 29,290 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.

வாக்கு எண்ணும் மையத்தின் நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளா்களுடன் வியாழக்கிழமை கலந்துரையாடியபோது அவா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி தொகுதியில் 26 சுற்றுகளும், நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் தலா 23 சுற்றுகளும், விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதிகளில் தலா 22 சுற்றுகளும் எண்ணிக்கை நடைபெறும்.

கன்னியாகுமரியில் 4,926, நாகா்கோவிலில் 3,196, குளச்சலில் 3,410, பத்மநாபபுரத்தில் 3,704, விளவங்கோட்டில் 3,553, கிள்ளியூரில் 3,501, ராணுவ வீரா்கள் 7,000 பேரின் தபால் வாக்குகள் என மொத்தம் 29,290 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மே 4ஆம் தேதி காலை 7.50 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும். தபால் வாக்கு எண்ணிக்கைக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, 6 தொகுதிகளுக்கும் சோ்த்து 39 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு செல்லவும், தோ்தல் அலுவலரின் அனுமதியின்றி அறைக்குள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.