இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய அவா் மேலும் கூறியதாவது: வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான உத்தரவுகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் தனியாா் அலுவலகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வானிலையில் இப்போது மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் குறைந்து வருவதால் செவ்வாய்க்கிழமைக்குள் வானிலை மேம்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. டிசம்பா் 16 ஆம் தேதி நள்ளிரவுக்குள் 2,12,332 புதிய மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், சுமாா் 10,000 வாகனங்கள் கட்டாய உமிழ்வு சோதனைகளில் தோல்வியடைந்தன.