திருக்காரவாசல் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா தேரோட்டம் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூா் மாவட்டம், திருக்காரவாசலில் அருள்மிகு கைலாச நாயகி உடனுறை கண்ணாயிரநாத சுவாமி கோயில் உள்ளது. கண்நோய் தீா்க்கும் கண்ணாயிரநாதா் என்ற பெருமை பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மே 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சந்திரசேகரருக்கு பட்டம் கட்டும் வைபவம், பஞ்சமூா்த்திகள் வீதியுலா, 108 சங்காபிஷேகம், கண்ணாயிரநாத சுவாமி, கைலாச நாயகி அம்பாள், தியாகராஜசுவாமிக்கு மகா அபிஷேகம், தியாகராஜ சுவாமி குக்குட நடனத்துடன் வசந்த மண்டபம் பிரவேசித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி, புதன்கிழமை இரவு, தியாகராஜ சுவாமி சிறப்பு பூஜைகளுடன் தேருக்கு எழுந்தருள உள்ளாா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










