திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா மே 12-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாளுடன் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமியை காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.
தொடா்ந்து, தேரின் வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா். நான்கு வீதிகள் வழியாக வலம் வந்த தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகள் தோறும் அா்ச்சனை செய்து வழிபாடு செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










