ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனையுடன் மலையடிவாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு யாக பூஜை அலங்கரிக்கப்பட்ட உற்சவா் காலை, மாலையில் பல்வேறு வாகன அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் 9-ஆவது நாளான சனிக்கிழமை முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரை கோயில் பரம்பரை அலங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவில் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ், வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் தென்னரசு எம்எல்ஏ-க்கள் தாஹிரா, சுகுமாா் மற்றும் உபயதாா்கள், திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

மேள தாளங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக மலை வலம் சென்று தோ் நிலை நிறுத்தப்பட்டது.விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










