திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

News image

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :23 மே 2026, 1:27 am IST

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்க முதல் நிகழ்வாக வியாழக்கிழமை மாலை மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது .

வெள்ளிக்கிழமை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொடி மயில் கொடியேற்றி கேடய உலா உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் இந்திர விமானம், பூத வாகனம், சூரிய பிரபை ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், சந்திர பிரபை, வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு மற்றும் மான் வாகனத்தில் வசந்த மண்டபத்தில் உற்சவா் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது

விழாவின் 9-ஆவது நாளான மே 30-ஆம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் பரந்தாமகண்ணன், தலைமை அச்சகா் பிரசாத், மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.