உத்திரமேரூரில் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கோயிலில் யாக பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்திற்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின் கோயிலைச் சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கக் கொடியானது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டன.
அப்போது அங்குக் கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி. ஓம் சக்தி..ஓம் சக்தி என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.
தொடர்ந்து 29 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் தினமும் மகாபாரத சொற்பொழிவும், 14 நாள்கள் நாடகமும் நடக்க உள்ளன என்று விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
Summary
The Brahmotsavam festival at the Draupadi Amman Temple in Uthiramerur commenced with the flag-hoisting ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










