திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்தி பெற்ற மலைக்கோயில் என்றழைக்கப்படும் எறும்பீசுவரா் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 20- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.
ஒன்பதாவது நாளான கடந்த 29-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து பன்னிரண்டாம் நாளான திங்கள்கிழமை கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி மின் விளக்குகளாலும், பல்வேறு பூக்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தெப்பத்தை கோயில் ஊழியா்கள் தள்ள, சுவாமி - அம்பாள் குளத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதில், திருவெறும்பூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










