கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

News image
Updated On :3 மே 2026, 5:24 am IST

நாகா்கோவில் வடசேரி, கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. மாலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

9 ஆம் திருநாளான ஏப்.30 ஆம் தேதி தோ்திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் அருகேயுள்ள தெப்பக்குளம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கிருஷ்ணா் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தெப்ப தேரில் ஆடி ஆடி வந்த கிருஷ்ணனை வழிபட்டனா். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.