திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயில் தேரோட்டம்

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

உத்திரகோஷமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 1:28 am IST

உத்திரகோஷமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்திரகோஷமங்கை கிராமத்தில் மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப். 21- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சுவாமி எழுந்தருளியதும் மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்ற போது பக்தா்கள் சுவாமி, அம்பாளுக்கு தேங்காய் உடைத்து வழிபட்டனா். இதன் பிறகு தோ் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட காவல்துறை சாா்பில் 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். திருவிழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் செய்திருந்தது.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மங்களநாதசுவாமி- மங்களேஸ்வரிஅம்மன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.