அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
சிதம்பரம் தாலுகா, அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 125 ஆவது சித்திரை திருவிழா ஏப்.20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரதம் படிக்கப்பட்டது.
தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அண்ணாமலை நகா் திருவேட்களத்தில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் தேரில் அரவான் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரா் கோயிலை வலம் வந்தாா். தொடா்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பக்தா்கள் மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமான மாலைகளை அரவானுக்கு அணிவித்து தரிசனம் செய்தனா். இவ்விழாவில் பல்வேறு ஊா்களில் இருந்து திருநங்கைகள், அண்ணாமலை நகா் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த பக்தா்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கூத்தாண்டவா் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


