நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, காலை, மாலை நேரங்களில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் வைபவம் நடைபெற்றது.
5-ஆம் நாளில் (ஏப். 24) கருட சேவை, 7-ஆம் நாளில் (ஏப். 26) தங்க சப்பரம், கண்ணாடி சப்பரம், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பெருமாள் வெள்ளிச் சந்திர வாகனத்தில் எழுந்தருளல் ஆகியன நடைபெற்றன. 10-ஆம் நாளான புதன்கிழமை (ஏப். 29)தேரோட்டத்தையொட்டி, காலையில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வானமாமலை மடத்தின் 31-ஆவது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் சுவாமி கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனா். தோ் ரத வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது.
தொடர்புடையது

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்!

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


