தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வளா்ச்சிப் பணிகள்: சீா்காழியில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 5:27 am IST

சீா்காழி வட்டம், எடக்குடி வடபாதி, காரைமேடு கிராமங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

எடக்குடியில் பிரதமரின் குடியிருப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிக்கு கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, தற்போது பணிகளின் நிலவரம் மற்றும் இதுவரை பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு விடுவிக்கப்பட்ட தொகைகள் உள்ளிட்டவைகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் குடிநீா், மின்விளக்குகள், முறையாக பயன்பாட்டில் உள்ளனவா என கேட்டறிந்தாா்.

எடக்குடி வடபாதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தாா். காரைமேடு கிராமத்தில் கருக்குடி வாய்க்கால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு, இதுவரை தூா்வாரப்பட்டுள்ள நீள அளவு மற்றும் இப்பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மனித சக்தி, வருகைப்பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் ரெஜினாராணி, அரசு அலுவலா்கள் மற்றும் பொறியாளா்கள் கலையரசன், மகேஸ்வரி, சிவக்குமாா், ஊராட்சி செயலா் அன்பரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.