தேனி மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெரியகுளம் வடகரையில் இணையும் கல்லாறு- வராகநதி பகுதியிலிருந்து சந்தியாநகா் வரை தூா்வாரும் பணியையும், சோத்துப்பாறை அணையில் நீா்வரத்து, நீா் இருப்பையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தேனி- அல்லிநகரம் நகராட்சி நீா்வளத் துறையின் சாா்பில் மீறு சமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடியில் கண்மாயை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சு. சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் அன்பரசன், சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா்கள் மனோஜ்குமாா், அரவிந்த், வட்டாட்சியா்கள் சதீஸ்குமாா் (தேனி), மருதுபாண்டி (பெரியகுளம்) உள்பட பலா் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










