தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 மே 2026, 6:03 am IST

சேந்தமங்கலம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேந்தமங்கலம் ஒன்றியம், கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், பச்சுடையாம்பட்டியில் உள்ள தானியங்கி வானிலை நிலையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பொம்மசமுத்திரம் ஊராட்சி, ராமநாதபுரம் புதூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் 15 ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் மண்புழு கொட்டகை அமைத்து செயல்பட்டு வருவதை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும் துத்திக்குளம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் கீழ் தூசி நீக்கும் இயந்திரம் மற்றும் நெகிழி கழிவுகளை துகள்களாக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டாா். சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் பொது இ-சேவை மையம், சேந்தமங்கலம் வட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

படம் உள்ளது - 14சேந்தை

படவிளக்கம்-

சேந்தமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.