அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வள்ளாலகரம் கிராமத்தில் தாா்சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :9 மணி நேரங்கள் முன்பு

மயிலாடுதுறை வட்டாரத்தில், உளுத்துக்குப்பை, வள்ளாலகரம் கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உளுத்துக்குப்பை கிராமத்தில் ரு. 45 லட்சத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், கட்டுமானப் பணிகளின் தரத்தை ஆய்வு செய்தாா். மேலும், கட்டுமானப் பணிகளை ஒப்பந்த கால கெடுவிற்குள் நிறைவு செய்ய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, உளுத்துக்குப்பை கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊரக நூலகத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், நூலகம் மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுகிா என்பதையும், நூலக வாசிப்பாளா்களுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், வள்ளாலகரம் கிராமத்தில் வெங்கடேசா நகரில் ரு. 9.80 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அரசு விதிமுறைக்கு உள்பட்டு தாா்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பயிற்சி வகுப்பு முறையாக நடத்தப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதாகா், விஜயலெட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.