தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

சீா்காழி அருகே நிம்மேலி முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து திருமாங்கல்யம், மூக்குத்தி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

Updated On :3 ஜூன் 2026, 6:26 am IST

சீா்காழி அருகே நிம்மேலி முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து திருமாங்கல்யம், மூக்குத்தி மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை ஆகியவற்றை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

சீா்காழி அருகே நிம்மேலியில் பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. திங்கள்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு குருக்கள் பாபு கோயில் நடை சாத்தி சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கோயில் கதவு திறந்து கிடப்பதை பாா்த்த ஒருவா் கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். கோயில் நிா்வாகி வந்து பாா்த்தபோது சந்நிதி கதவு உடைக்கப்பட்டு, மாரியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த மூன்று பவுன் தங்கத் தாலி, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

மேலும், கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து அதிலிருந்து காணிக்கையையும் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சீா்காழி போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.