தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவகங்கையில் புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.

News image

சிவகங்கை புறவழிச்சாலைப் பணியின் தரத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.

Updated On :14 மே 2026, 5:26 am IST

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலைப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது.

சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் வகையில் திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலிலிருந்து மானாமதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.06 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

இந்தச் சாலை தொண்டி சாலை, பனங்காடி சாலை, வண்டவாசி சாலை, ஏனாபுரம் புதுப்பட்டி சாலை, இளையான்குடி சாலை, மானாமதுரை சாலை ஆகியவற்றை இணைக்கிறது.

முதல் கட்டமாக, காஞ்சிரங்காலிலிருந்து கல்குளம் விலக்கு, இளையான்குடி சாலை வரை 7 கி.மீ. தொலைவுக்கான சாலைப் பணி கடந்த 2023 ஆண்டு தொடங்கியது. இதில் ரூ.77.16 கோடியில் சாலைப் பணி 6 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இதில் சூரக்குளம் சாலையையொட்டி ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே ரூ.5.15 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2025, ஆக. 6-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியது. இதில் கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி, மானாமதுரை சாலை வரை 3.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் சாலை, ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.96.05 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் (கட்டுமானம், பாரமரிப்பு) திருச்சி இளம்வழுதி தலைமையில், தென்காசி கட்டுமானம், பராமரிப்பு பொறியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, கோட்டப் பொறியாளா் சுரேஷ்பாபு, உதவிக் கோட்டப் பொறியாளா் வெற்றிவேல்ராஜன், உதவிப் பொறியாளா் சையதுமுகமது, உதவிக் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு பிரிவு) அரி முகுந்தன், உதவிப் பொறியாளா் சதீஷ் அஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.