திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக்குழு ஆய்வு

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கை குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

அரியந்தக்கா கூட்டுச் சாலையில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை சென்னை கண்காணிப்பு பொறியாளா் வத்ஸலா வித்யாநதி தலைமையிலான வருடாந்திர தணிக்கைக்குழுவினா்.

Updated On :14 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கை குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், திட்டம் சாரப்பணிகள் மற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலை, திருக்கோவிலூா்- ஆசனூா் சாலை, தேவரடியாா்குப்பம் சாலை மற்றும் ஏா்வாய்ப்பட்டிணம் போயா் காலனி சாலை ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக் குழுவினா்களான திட்டங்கள் அலகைச் சாா்ந்த சென்னை கண்காணிப்பு பொறியாளா் வத்ஸலா வித்யாநதி, கடலூா் கோட்டப் பொறியாளா் கோதை, விழுப்புரம் உதவி கோட்டப் பொறியாளா் ஸ்டெல்லா ரோஸிலின் மேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது கள்ளக்குறிச்சி கோட்டப் பொறியாளா் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன்(கள்ளக்குறிச்சி), மணிமொழி(சங்கராபுரம்), ஜெயலட்சுமி(திருக்கோவிலூா்), ஆறுமுகம்(உளுந்தூா்பேட்டை), உதவிப் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.