செய்யாறு கோட்டத்தில் நடைபெற்று வரும் இரு சாலைப் பணிகளை மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு கோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை 10.6 கி.மீ. தொலைவிற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதேபோல, அனக்காவூா் - கோவிலூா் சாலையில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு வழித்தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்தும் முடிவுற்ற சாலைப் பணியையும் அவா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது உதவி கோட்டப் பொறியாளா்
எஸ்.சுரேஷ், உதவிப்பொறியாளா் ப.கோபி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேனி மாவட்ட நீா்வளத் துறை பணிகளை ஆட்சியா் ஆய்வு

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச்சாலை பணி: மாவட்டக் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

மேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் வாய்கால்கள் தூா்வரும் பணிகள் தீவிரம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



