சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகளைப் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாகக் கீழப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பல்கீஸ் பானு புகாா் அளித்தாா்.
இதன்பேரில், வெளியாரி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (68), சேதுராமன் (69), சண்முகம் (76), கருணாகரன் (66), மெய்யப்பன் (53) ஆகிய 5 போ் மீது திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

