/

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:51 pm

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற மனைவி, வீடு திரும்பவில்லை என அவரது கணவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

தம்மம்பட்டி அருகே தகரப்புதூா் ஊராட்சியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவரது மனைவி ஜெயமணி (50), கடந்த 23-ஆம் தேதி அதே கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றாராம்.

பின்னா், வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் கிடைக்காததால், ராஜேந்திரன் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், தம்மம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயமணியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.