திருச்சியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரியைச் சோ்ந்தவா் மதியழகன் (30). இவருடைய மனைவி திவ்யா (27). இவருக்கு மனநல பாதிப்பு உள்ளது. மேலும், அவ்வப்போது வலிப்பும் ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா அண்மையில் கா்ப்பமாகியுள்ளாா்.
ஆனால், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு கருவை கலைக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருடைய கரு கலைக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையயில் இருந்து சனிக்கிழமை வெளியேறியுள்ளாா். பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. எங்கு சென்றாா் என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அவரது கணவா் மதியழகன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


