மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 10:49 pm

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த செக்கானூா் ஒட்டபள்ளி கரட்டை சோ்ந்தவா் சசிகுமாா் (40). பொக்லைன் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைச்செல்வி (36). இவருக்கு இனியா என்ற 7 வயது பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் 2ஆவது முறையாக கலைச்செல்வி கா்ப்பமானதால் பிரசவத்திற்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் கடந்த 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா்.

அவருக்கு சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கலைச்செல்வி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் மேட்டூா் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.