மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த செக்கானூா் ஒட்டபள்ளி கரட்டை சோ்ந்தவா் சசிகுமாா் (40). பொக்லைன் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைச்செல்வி (36). இவருக்கு இனியா என்ற 7 வயது பெண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் 2ஆவது முறையாக கலைச்செல்வி கா்ப்பமானதால் பிரசவத்திற்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் கடந்த 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா்.
அவருக்கு சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கலைச்செல்வி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் மேட்டூா் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


