மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:29 pm

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் அந்தோணி (52). இவா், தனது மனைவி சுமிளா (41), மகன் ஆண்டோ அலி (19), மகள் ஆண்டோ அசின் (7) ஆகியோருடன் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தாா். நான்கு வழிச்சாலையில் விநாயகபுரம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிமிளா உயிரிழந்தாா். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.