/

பாம்புக் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:47 pm

கடையம் அருகே நரையப்பபுரத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்புக் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (58). இவரது மனைவி அய்யங்கண்ணு (56). ஏப். 17-ஆம்தேதி இரவு அய்யங்கண்ணு குடும்பத்துடன் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டில் நுழைந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்ததாம்.

உடனடியாக அய்யங்கண்ணுவை உறவினா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கடையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.