கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள சித்தாா்சத்திரம் வடக்கு தெருவை சோ்ந்தவா் தாமரைச்செல்வன் (22). இவா் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.
நண்பா்களுடன் வெளியே செல்வதாக கூறிச் சென்ற தாமரை செல்வன் வீடு திரும்பவில்லையாம். அவரை உறவினா்கள் பல்வேறு இடங்களிலும் தேடினா். இந்நிலையில் சிற்றாறு தடுப்பணை பகுதியில் தாமரைச்செல்வன் சடலமாக கிடப்பது சனிக்கிழமை தெரியவந்ததாம்.
தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


