மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 7:20 pm

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் சசிதரன் (24). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 40 பேருடன் கோயில் திருவிழாவுக்காக காவிரி தீா்த்தம் எடுப்பதற்காக கொடுமுடிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, அவா் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளாா். சசிதரனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவா் நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க முயன்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவா்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொடுமுடி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.